கதிர்நிலம்

My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Sunday, June 13, 2010

விதைக்கப்பட்டேன்
சில்லென சிதைக்கப்பட்டு
வல்லென்று உறவுக்கு உட்படுத்தப்பட்டு
பொல்லென்று  இடரப்பட்டு
தட்டென்று வீழ்த்தப்பட்டு
பட்டென்று மூடபட்டேன்
ஆதலால்
நான்
விதைகப்பட்டவன்   .

எழுத எத்தனிக்கும் போதெல்லாம்
ஓத வரும் ஒற்றை அழகே
பேதமிருக்கும் காலமெல்லாம்
நீலமாய் அளவா போயிருக்கின்றது
மனிதத்தின் மேனிகள்
காத தூரத்திலே  கதை அளந்து
கற்பனையை எட்டி ஊட்டி
மீதமிருக்கும் காலத்தையும்
மரணங்களின் எண்ணிக்கைலே
அளந்து வெற்று சலனங்களிலேயே
ஒய்ந்துவிடுமோ எமது ஒற்றை மோகம்
வென்றிடுவோம் ஈழம்த்தை மட்டுமல்ல
மாண்ட மனிதத்தையும்  தான் !

Friday, June 4, 2010

வெளியில் விடப்பட்டவன்

வேறு வழி இன்றி வீரமுடன் நின்றதால்
காண கண் இன்றி உலகம் போனதால்
நாதியற்றவன் என்று நாய்கள் கொண்டதால்
விதி என்று அருகில் உள்ளவனும் சொன்னதால்
பெயரும் தமிழன் என்று ஆனதால்
இவன் வெளியில் விடப்பவன்