கதிர்நிலம்

My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Sunday, February 28, 2010

ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள் என இங்கே         குறிக்கபெறுபவர்கள் வரலாற்றை பற்றி ஆய்தவர்கள். இவர்களை பற்றிய கண்ணோட்டம் சிறிதே விளக்கத்துடன் பதியப்பெருகின்றது.
இருபதாம்  நுற்றாண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வுகளை இந்தியா கண்டுள்ளது . 
அந்த நிகழ்வுகளை நகர்த்திய உணர்வு ஒன்று காலனிய எதிர்ப்பு என்ற உணர்வு மக்களை ஓர்மை படுத்தி அந்நியன் என்ற வரையறைக்குள் ஆங்கிலேயனை இருத்தி
போராட செய்தது இதன் ஊடக தேசியம்  என்பது கற்பிக்கப்பட்டு உண்மையான தேசிய இனம்களை இல்லாத இந்திய தேசியத்தில் சாதிய நார்களை முலமாக இறுக்க உணர்வுகளை விரவபபட்டு  இந்து என்ற பசை தூவப்பட்டு மக்களை நிறுத்தியது.
ஆயினும் இப்போலி முன்னெடுப்புகளை எதிர்த்து சமுக விடுதலை உணர்வுகளை பரப்ப உருவான இயக்கம்களே பின் மக்களை அடிமைத்து காரியம்களில் கட்சிதமாய் மாறி விட்டது. உதாரனமாய் ஆளும் இன்றைய மதிய மாநில அரசுகள்.
 விடுதலைக்கு முன்பாக பதியபெற்ற வரலாற்று நிகழ்வுகள் ஓரளவேனும் அல்லது பெரிய இருட்டடிப்பு இல்லாமலும் பதியபெற்று இருப்பினும்  விடுதலைக்கு பிந்தைய நிகழ்வுகளை நடுநிலைமையுடன் பதியபெற்று இருகின்றதா என்றால் முழுமையாக இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. வரலாறு உடையும்போதும் அழியும் போதும் பாதிக்கபடுவது அவ்  வரலாற்றுக்கு உரிய இனம்களே.

Thursday, February 18, 2010

எங்கேயும் நான் தமிழனாக இல்லை!நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியேஉயர்ந்தோங்கிய தூணோரம்ஒதுங்கி நின்றுஉள்ளே வரலாமா? என்று“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டுஐம்பதாண்டு காலமாகஅடிதொழுது கிடக்கிறாள்என் தாய்.
பள்ளிகளின்வாயில்களுக்கு வெளியேவறியவள் போல் நின்றுதான் பெற்ற குழந்தைகளுக்குத்தாய் பாலூட்டஆங்கிலச் சீமாட்டியிடம்அனுமதி கோரிகண்ணீரோடு காத்து நிற்கிறாள்என் தாய்.
ஆலயத்துக்குள்ளே நடக்கும்ஆறுகால பூசைகளில்ஒரு காலத்துக்கேனும் என்னைஉள்ளே விடக்கூடாதா- என்றுசமசுகிருத எசமானியிடம்தட்டேந்தி நிற்கிறாள்என் தாய்.
இசை மன்றங்களின்குளிரூட்டிய கூடங்களில்துக்கடாவாக மட்டுமேதூக்கி எறியப்படுவதைச்சகித்துக் கொண்டுநூலோரின் சங்கீத சபைக்குள்நுழையமுடியுமா –என்றுதெலுங்கு தியாகையரிடம்தேம்பி நிற்கிறாள்என் தாய்.
டெல்லி வழி இந்திபள்ளி வழி ஆங்கிலம்இறைவன் வழி சமசுகிருதம்இசையின் வழி தெலுங்கு மொழி
என்ற நான்கு சங்கிலிகள்கைகள் இரண்டிலும்கால்கள் இரண்டிலும்இரும்புத் தளைகளால்இறுக்கப்பட்ட என் தாய்
அடைக்கப்பட்ட சிறையின் பெயர்டெல்லி!
தேசியக் கொடியாட்சிஎன்ற பெயரில் – இந்தியத்தேசங்களின் மீதுகொடிய ஆட்சி
ஆளும் கொடிகள்வண்ணங்கள் மாறலாம்சின்னங்கள் மாறலாம்எண்ணங்கள் மட்டும்எப்போதும் மாறுவதில்லைசற்றே திரும்பிப்பார்க்கிறேன்என் – சரித்திரச் சாலையை
அன்று நான்சோழனாக இருந்தேன்சேரனாக இருந்தேன்பாண்டியனாக இருந்தேன்தமிழனாக இல்லை!
அன்று நான்சைவனாக இருந்தேன்வைணவனாக இருந்தேன்சமணனாக இருந்தேன்பவுத்தனாக இருந்தேன்தமிழனாக இல்லை!
நான்
பல்லவனாக இருந்தேன்சுல்தானாக இருந்தேன்பாளையக்காரனாக இருந்தேன்தமிழனாக இல்லை!
பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!
இன்று நான்
இந்துவாக இருக்கிறேன்இஸ்லாமாக இருக்கிறேன்ஏசுவாக இருக்கிறேன்எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நான்
சூத்திரனாக இருக்கிறேன்பஞ்சமனாக இருக்கிறேன்பழங்குடியாக இருக்கிறேன்தமிழனாக இல்லை!
ஆயிரம் உண்டிங்கு சாதிஅத்தனைச் சாதியாகவும்நான் இருக்கிறேன்தமிழ்ச் சாதியாக மட்டும்இருக்க மறுக்கிறேன்
அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணிடெல்லியில் நான் மதராஸிஅந்தமானில் நான் தோத்திவாலாஆந்திரத்தில் நான் அரவாடுகேரளத்தில் நான் பாண்டிப்பறையாகர்நாடகத்தில் நான் கொங்காரிக் வேதத்தில் நான் தஸ்யூராமாயணத்தில் நான் ராட்சசன்சரித்திரத்தில் நான் திராவிடன்எங்கேயும் தமிழனாகஏற்கப்படவில்லை நான்
அரசியல் சட்டத்தில்என் பெயர் இந்தியன்இந்தியத் தேர்தலில்என் பெயர் வாக்காளன்எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை
தமிழ் நாட்டில் என் அடையாளம்வன்னியன்,வேளாளன்,கள்ளன்,கைக்கோளன்,பள்ளன், பறையன்,இத்தியாதி இத்தியாதிஎன்று எத்தனையோ சாதி
செட்டியார் இனம்ரெட்டியார் இனம்என்பது போல்சாதி தான் இனம் என்று எனக்குத்தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்தமிழன் என்ற இன அடையாளம்சந்திரகிரகணமாகிவிட்டது……………………….…………………– பாவலர் தணிகைச்செல்வன்Read more: http://meenakam.com/?p=6826#ixzz0fxSXSAn0